செய்திகள்

தொடரும் ஆசிரியர் போராட்டம்! – மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை

Published

on

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியாவில் இன்று பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பாடசாலைக்கு வந்த மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

200 இற்கு உட்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்குமாறு அரசு அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் இன்று பாடசாலைகள் திறக்கப்படவிருந்த போதிலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களது போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையில், வவுனியாவில் 85 பாடசாலைகள் இன்று திறக்கப்படும் என வலயக்கல்வி அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இன்று காலை பாடசாலைகள் பலவற்றின் முன் வாயில் கதவு மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இதேவேளை, சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றபோதிலும் குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version