செய்திகள்

எம்மிடம் பொருளாதார பலம் இல்லை! – நியாயப்படுத்திய அமைச்சர்

Published

on

“விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான ‘பொருளாதார பலம்’ தற்போது அரசாங்கத்திடம் இல்லை.” என அறிவித்து, தொடர் விலையேற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார் அமைச்சர் காமினி லொக்குகே.

மொட்டுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, இதன்போது விலை உயர்வு சம்பந்தமாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்.

“பால்மா, சமையல் எரிவாயு உட்பட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விலை உயர்வுக்கு அரசாங்கத்தின் தவறு காரணம் அல்ல. உலக சந்தையில் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. அதுவே காரணம்.

உலக சந்தையில் விலை அதிகரித்தாலும், எரிபொருள் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு ஆகியவை அதே விலைக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

கொரோனா நிலைமையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான பொருளாதார சக்தி அரசாங்கத்திடம் இல்லை. அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் வழங்கினால் அது பெரும் தாக்கமாக அமையும்.” – என்றார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version