செய்திகள்

தாய்வானில் தீக்கிரையானது 13 மாடி கட்டிடம்

Published

on

தாய்வானில் 13மாடி கட்டிடமென்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு தாய்வானின் கயோசியுங் என்ற பிரதேசத்திலுள்ள 13 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.இவ் அடுக்குமாடியில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர்.

கீழ் தளத்தில் கடைசிகள் இயங்கி வந்தன. இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.சட்டு நேரத்திலேயே தீ கட்டிடம் முழுவதும் பரவியது

அதிகாலை நேரம் என்பதால் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் நன்றாக நித்திரை செய்து கொண்டிருந்தனர்.

திடீரென தீ வேகமாக பரவியதால் 100-க்கும் மேற்பட்டோர தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 32 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.

மேலும் 55 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

தீ விபத்து ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியாத நிலையில், அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது.

அதில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் மீட்புப்படையினர் என தெரிவித்தனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version