செய்திகள்

இருளில் மூழ்கிய லெபனான்

Published

on

லெபனானில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இந்த பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகின்றது.  இதன் காரணமாக லெபனான் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள அனைத்து பிரதான மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய எரிபொருள் இல்லாது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்ட நிலையில் லெபனான் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கி சிக்கித் தவிக்கின்றது.

அங்குள்ள மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் இடங்களில் கூட மின்சாரம் இன்மையால் நோயாளிகள் மற்றும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர் என அங்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில இடங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த மின்தடை லெபனானில் பல நாகள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version