செய்திகள்

கிளிநொச்சியில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகம்!!

Published

on

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு காலப்பகுதியை விட இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்பவை தொடர்பான முறைப்பாடுகள் அண்மைய நாள்களாக அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம், இராமநாதபுரம், அக்கராயன், ஜெயபுரம், நாச்சிக்குடா, பூநகரி, பளை மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 7 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த துஸ்பிரயோக சம்பவங்களைத் தவிர்த்து, சிறுவர்களைத் துன்புறுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு காயம் விளைவித்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகளும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. – என்றுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version