செய்திகள்

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை-இந்தியாவில் தொடரும் கொடூரம்

Published

on

இந்தியாவில் ஓடும் புகையிரதத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லக்னோ பகுதியிலிருந்து இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் கொள்ளையர்களால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில் 8பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோபகுதியிலிருந்து இருந்து மராட்டியத்தின் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் புகையிரதம் புறப்பட்டது.

மராட்டியத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு புகையிரதம் வந்தபோது அதில் ஆயுதங்களுடன் 8 கொள்ளையர்கள் ஏறினர்.

படுக்கை பெட்டியில் ஏறிய கொள்ளையர்கள் பயணிகளிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

மேலும் கொள்ளையர்கள் 20 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவரை அவரது கணவர் மற்றும் சக பயணிகள் முன் ஒடும் புகையிரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதை தடுக்க முயன்ற பெண்ணின் கணவர் மற்றும் சக பயணிகளை கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளறார்கள்

புகையிரதம் மும்பையின் கசரா ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் கூச்சலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் கொள்ளையர்களில் 4 பேரை கைது செய்தனர்.

மற்றய 4 கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தபொலிஸார் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் எஞ்சிய 4 கொள்ளையர்களையும் பொலிஸார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் 4 பேர் மேலும் ப குற்றங்களோடு தொடர்புடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கெதிரான பல கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version