செய்திகள்

ஐ.பி.எல். லில் சாதித்த அதிவேக பந்து வீச்சாளர்!

Published

on

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

இவ்வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் றோயல் சலஞ்சேர்ஸ் அணியும், ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப் போட்டியில் அதிவேக பந்து வீச்சாளராக, ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியின் 9வது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய 4வது பந்தில் இந்த சாதனை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மணிக்கு 153 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசி அவர் சாதனை படைத்துள்ள நிலையில், அவர் வீசிய பந்திற்கு ஒரு ஓட்டமே பெறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றொரு போட்டியில் தனது முதல் ஓவரில் மணிக்கு 146 கிலோ மீற்றர் வேகத்தில் உம்ரான் மாலிக் பந்து வீசியிருந்த நிலையில், ஐ.பி.எல்.லில் அதிவேக பந்து வீசியவர்களின் தர வரிசையில் 10ஆவது இடம்பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version