செய்திகள்

வீதிகள் துரித அபிவிருத்தி! – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Published

on

விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

செளபாக்யா எதிர்கால கொள்கை பிரகடன திட்டத்திற்கமைய “முன்னுரிமை வீதி” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதேச வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் தேவைகள் உணரப்பட்டு இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாய மக்கள் தங்களின் உற்பத்திகளை தாமதமின்றி பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.

அதன் மூலம் விவசாய மக்கள் பொருளாதாரத்தை இலகுவில் விருத்தி செய்து கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version