செய்திகள்
யாழ்.கீரிமலை கடலில் மூழ்கி இளைஞரொருவர் மாயம்!
யாழ்.கீரிமலை கடலில் மூழ்கி இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார்.
தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
நண்பர்களுடன் கீரிமலை கடலில் இன்று நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment Login