செய்திகள்

ஐரோப்பாவில் 3ஆவது டோஸாக பைஸர்!

Published

on

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

ஜேர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பல்வேறு நாடுகளில் 3 ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை 3 வது பூஸ்டர் டோஸாக செலுத்த ஐரோப்பிய ஒன்றிய மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரும், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்த நிலையில் இருந்ததால் பூஸ்டர் டோஸாக 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி பின்னர் 6 மாத இடைவெளிக்கு பின், 3-வது டோஸை செலுத்திக்கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றிய மருந்து கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version