செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் மோதும் ரி-20 போட்டி: யார், யார் பார்க்கலாம்?

Published

on

ரி-20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள குறித்த ரி-20 போட்டியைப் பார்வையிடுவதற்காக, 70 சத வீத இரசிகர்களுக்கு, ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது.கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியானது, தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றிருந்தது.இதுவரை 6 தடவைகள் இடம்பெற்றுள்ள குறித்த போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பையை வெற்றிகொண்டுள்ளன.

இந்நிலையில் 7ஆவது தடவையாக ரி-20 போட்டியை, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடாத்தத் தீர்மானித்திருந்த நிலையில், கொரோனா இடரினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில், ரி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியைப் பார்வையிட 70 வீதமான இரசிகர்களுக்கு அனுமதி வழங்க ஐ.சி.சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version