செய்திகள்

பிரதமர் வீட்டில் காணாமல்போன 3000 டொலர் பெறுமதியான பூனை?

Published

on

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமல் போயுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுத் தொகையை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த பூனையானது Turkish Angora வகையை சேர்ந்தது எனவும் அதன் பெறுமதி 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

17 ஆம் நூற்றாண்டு வரை இந்த வகை பூனைகளின் இனப்பெருக்கம் காணப்பட்டதற்கான பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இனப் பூனைகள் Angora அல்லது Ankara பூனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version