செய்திகள்

யாழில் அரச பேருந்து மோதி வயோதிபப் பெண் பலி!

Published

on

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று நின்றுக்கொண்டிருந்த  வயோதிபப் பெண்ணொருவரை மோதியுள்ளது.

இதன்போது விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version