செய்திகள்

இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்!

Published

on

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ்ப்பாணத்திற்கும் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் வெளியுறவு செயலாளரின் அழைப்பின் பேரில் நாளைய தினம் இலங்கை வரும் அவர், எதிர்வரும் 5ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய வெளியுறவு செயலாளர் ஷ்ரிங்லா, இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

மேலும், இலங்கையின் வெளியுறவு செயலாளருடனான இருதரப்பு சந்திப்பிலும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த பயணம் நீண்டகால உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version