செய்திகள்

நிவாரணம் வழங்குங்கள்! – பிரதமர் ஆலோசனை

Published

on

இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இயன்றளவு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கே பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்களும், பொதுமக்களும் எதிர்கொண்டுள்ள சிரமங்களை கருத்திற்கொண்டே பிரதமரால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் தீர்வு முன்வைக்கப்படுமென பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version