செய்திகள்

கருக்கலைப்பு செய்வதை சட்ட உரிமையாக்குங்கள்! – பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published

on

மெக்சிக்கோவில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமையளிக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெக்சிகோவில் 4 மாநிலங்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டப்படி உரிமை காணப்படுகின்றது.

இந்நிலையில் கருக்கலைப்பை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் கருக்கலைப்பு செய்ய செல்லும் போது கூட அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலை மெக்சிக்கோவில் காணப்படுகின்றது.

ஆகவே இந்நிலை எந்த வகையில் நியாயம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பேரணியாகச் சென்றவர்களை காவல்துறையினர் தடுக்க முற்பட்ட போது தடுப்புகளை தகர்த்தும், சமிக்ஞை விளக்குகளை உடைத்தும் பெண்கள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

1 Comment

  1. Pingback: சட்டப்பூர்வ கருக்கலைப்பினை எதிர்க்கும் மதத் தலைவர்கள் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version