செய்திகள்

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 932 பேருக்கு கொவிட் தொற்று!

Published

on

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 932 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடைய மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 524 ஆக உயர்வடைந்துள்ளது .

இவர்களில் 4 இலட்சத்து 56 ஆயிரத்து 87 பேர் கொவிட் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர் ,

தொற்றுக்கு இலக்கான 46 ஆயிரத்து 651 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 55 பேர் பலியாகியுள்ளனர் .

இதனைடுத்தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 786 ஆக உயர்வடைந்துள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version