செய்திகள்

ஆனையிறவுப் பகுதியில் விபத்து – சிறுவன் காயம்

Published

on

கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவுப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தானது நேற்று (28) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதி அருகில் திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தோடு , பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி வந்த முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவனுக்கு காலில் காயமேற்பட்டுள்ள நிலையில் நோயாளர் காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version