செய்திகள்

மட்டக்களப்பில் விபத்து – இளைஞர் ஒருவர் பலி !

Published

on

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு,களுதாவளை பகுதியினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

கல்முனையில் இருந்து பயணித்த காரும் மட்டக்களப்பில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேராக மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version