செய்திகள்

ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி !

Published

on

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்டசிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது என சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோயநிலைமைகளால் பாதிப்படைந்துள்ள மற்றும் விசேட தேவைகளையுடைய 12 வயதுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள சகல பிரதான மருத்துவமனைகளிலும் 12 – 19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version