செய்திகள்

ATM இயந்திரம் உடைக்கப்பட்டு பெருந்தொகை பணம் கொள்ளை !

Published

on

மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றின் ATM இயந்திரம் உடைக்கப்பட்டு பெருந்தொகையான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள வணிக வளாகத்தின் ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ள ATM இயந்திரம் உடைக்கப்பட்டு 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ATM இயந்திரம் செயலிழந்தமையினால் அந்த அதிகாரிகள் அதனை சோதனையிட்டவேளையிலே அங்கு பணம் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version