செய்திகள்

குலாப் புயலில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

Published

on

நேற்றயதினம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்தது.

இதன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடலுக்கு சென்ற ஆந்திர மீனவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

புயல் கரையைக் கடக்கும்போது காற்று வேகமாக வீசியதால்,மீனவா்கள் சென்ற படகு கவிழ்ந்து அதிலிருந்த 6 மீனவா்கள் கடலில் விழுந்துள்ளனர். அவா்களில் 3 போ் மீட்கப்பட்டுள்ளனா். இருவர் உயிரிழந்துள்ளனர்.

குலாப்புயல் காரணமாக கலிங்கப்பட்டினத்தில் 90 கி.மீ. வேகத்திலும், ஒடிசாவின் கோபால்பூா் பகுதியில் 30 கி.மீ. வேகத்திலும் பயங்கர காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version