செய்திகள்

மருத்துவ தம்பதியினர் வீட்டில் திருட்டு – சந்தேக நபர் கைது

Published

on

யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியினரின் வீட்டில் இரவில் திருட்டில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி இந்த திருட்டு இடம்பெற்ற நிலையில் நேற்று (26) அரியாலையை சேர்ந்த 24 வயதான சந்தேகநபர் கைதாகியுள்ளார் .

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டமையை தொடர்ந்து மேற்க்கோள்ள்ளப்பட்ட விசாரணையில் நேற்று குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளதோடு ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன்கள் என்பன அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன .

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version