செய்திகள்

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தமே கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணம்! – வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவிப்பு!

Published

on

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களே கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் என ​சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் 80 வீதமானோர் குறித்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களில் 75,000 இற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை கொரோனாவினால் உயிரிழந்தோரின் 3,000 இற்கும் மேற்பட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1 Comment

  1. Pingback: குழந்தையை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட பெண் வைத்தியர் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version