செய்திகள்

மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து!

Published

on

முன்பள்ளி மற்றும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் இச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் மாணவர்கள் பயணிக்கும் தனியார் வாகனங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version