செய்திகள்

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் உயிரிழப்பு !

Published

on

வடக்கு மாகாணத்தில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதம் முதல் நேற்று (24) வரையான காலத்தில் வடமாகாணத்தில் 8 ஆயிரத்து 401 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (25) சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைப்படி
வவுனியா மாவட்டத்தில் நேற்று(24) 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு நேற்றைய தினம் (24) யாழ் மாவட்டத்தில் ஐவரும் , வவுனியா மாவட்டத்தில் இருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை வட மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 719 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version