செய்திகள்

மருத்துவர் எலியந்த வைட் கொரோனா தொற்றால் மரணம்!

Published

on

மருத்துவர் எலியந்த வைட் கொரோனா தொற்றால் மரணம்!

மருத்துவர் எலியந்த வைட் கொரோனாத் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

மருத்துவர் எலியந்த வைட் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை என மருத்துவமனை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சச்சின் டெண்டுல்க்கர், லலித் மலிங்க உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரிடம் சிகிச்சை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version