செய்திகள்

வவுனியாவில் 94 பேருக்கு தொற்று! – இருவர் மரணம்

Published

on

வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புவைத்திருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் , அன்டிஜென் பரிசோதனை முடிவுகளின் ஒரு பகுதி இன்று (23) வெளியிடப்பட்டிருந்தது.

இந்த முடிவுகளின்படி மேலும் 94 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

இதேவேளை, வவுனியாவில் நேற்று இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சாந்தசோலை பகுதியிலுள்ள பெண் ஒருவரும் (வயது – 58), தவசிகுளம் பகுதியிலலுள்ள பெண் ஒருவருமே (வயது – 35) இவ்வாறு கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version