செய்திகள்
வடக்கில் கிராம சேவகர்களுக்கு தொற்று!
வடக்கில் கிராம சேவகர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவுகளைச் சேர்ந்த கிராமசேவகர்களே தற்போது கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமசேவகர்கள் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் துரித அன்டிஜென் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.
இந்த பரிசோதனையின் போது அவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்களும்,அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login