செய்திகள்

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

Published

on

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

அண்மையில் யாழ். கொடிகாமம் – காரைக்காட்டு வீதியில் விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. அது திட்டமிட்ட கொலை என்று இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.

கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான நவர்ணன் எனும் இளைஞன் கடந்த 14ம் திகதி இரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகமுள்ளது என அவரது பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சோி நீதிமன்ற நீதவான் யாழ்ப்பாணம் மரண விசாரணை அதிகாரியினூடாக மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

மரண விசாரணைகளில் குறித்த இளைஞன் விபத்தின்போது இதயம் வெடித்தே உயிரிழந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version