செய்திகள்

புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! – பொன்சேகா

Published

on

புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! – பொன்சேகா

முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் ரத்வத்த, தற்போது அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டுவது வீரம் கிடையாது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். போதைப்பொருள் வர்த்தகர்களையும், துப்பாக்கிகளை காட்டி மிரட்டுபவர்களையும் அமைச்சுப் பதவியில் வைத்திருந்தால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள் இன்று எல்லோராலும் விமர்சிக்கப்படுகின்றன, போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளை பார்த்து ஓடி ஒளிந்திருப்பார். அவ்வாறு மரண பயத்திலிருந்த நபர்,

ஆனால் தற்போது நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளை முழந்தாளிட செய்து அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். இது சண்டித்தனமான செயல் அல்ல ,

இவ்வாறான காரியத்தை எந்த தைரியசாலிகளும் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version