செய்திகள்

லொஹானுக்கு எதிராக விசாரணைகள்! – நாமல்

Published

on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விரைவில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கைதிகளின் கோரிக்கைக்கு அமைய  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கைதிகளை சந்தித்த நாமல், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

நாட்டை ஒழுக்கமான நாடாக கட்டியெழுப்பும் நோக்குடனேயே ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.
அதற்கு எதிராக யாரேனும் வந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர் ஒருபோதும் தயங்கமாட்டார்.

தற்போது சிறைச்சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலையிலுள்ள சி.சி.டி.வி.காட்சிகளை ஒழிக்க முடியாது. அவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் இடம்பெறாது.

இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை வந்தவுடன் இவ் விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்போம் என அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version