செய்திகள்

கைதிகள் அச்சுறுத்தல்! – விசாரணை வேண்டும்!

Published

on

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் குடிபோதையில் நுழைந்து கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசாரணைகளுக்கு முன்னர் சிசிடிவி ஆதாரங்களை சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் செயற்பாடுகள் நடைபெறாது உடனடியாக தடுக்க வேண்டும்.

இந்த செயலை ஒரு சாதாரண பிரஜை செய்திருந்தால் உடனடியாக அவர் கைதாகி விளக்கமறியலிடப்பட்டிருப்பார் – என்றார்.

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அரசியல் கைதிகளை மண்டியிடச்செய்து துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் எனும் செய்தி வெளியாகிய நிலையில் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version