செய்திகள்

யாழ். வாகன விபத்தில் முதியவர் பலி !

Published

on

பால் விற்பனையில் ஈடுபட்டு முடித்து, வீடு திரும்பிய முதியவரொருவர் வீட்டு வாசலின் முன்பு இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேர்ந்த 67 வயதான சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி எனும் நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் வழமைபோன்று நேற்றைய தினமும் (12) பால் வியாபாரத்தில் ஈடுபட்டு முடித்த பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதன்போது வீட்டு வாசலின் முன்பாக வீதியை கடக்க முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்தை நோக்கி அராலியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார் .

முதியவரை விபத்திலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version