செய்திகள்

இந்தியாவில் தொற்று – 31,374

Published

on

இந்தியாவில் நேற்றைய தினம் 31 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையில் 3 கோடியே 24 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 3 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலை கவலைக்கிடமாக உள்ளதோடு, மேலும் 219 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version