செய்திகள்

மருத்துவபீட பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் 

Published

on

மருத்துவபீட பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மருத்துவபீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய பீடாதிக்கான தேர்தல்  இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

மருத்துபீட சபை உறுப்பினர்களுடையிடையே இடம்பெற்ற வாக்கெடுப்பில் வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் 22 வாக்குகளைப் பெற்று 4 மேலதிக வாக்குகளால் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கொவிட் -19 தடுப்பு செயலணியின் இணைப்பாளராகப் பதவி வகிக்கும் வைத்திய கலாநிதி இ. சுரேந்திரகுமாரன், மருத்துவபீட சமுதாய மருத்துவத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார். இவர் சமுதாய மருத்துவத் துறையின்  தலைவராக 2012 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version