செய்திகள்

வவுனியாவில் தடுப்பூசி ஏற்றிய 100 வயது மூதாட்டி!

Published

on

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 100 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல தரப்பினராலும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியைப் பெற முன்வரவில்லை.

இந்த நிலையில் வவுனியா நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி பெற விரும்புகிறேன் என கூறியதற்கு இணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் நடமாடும் தடுப்பூசி சேவையின் மூலம் அவருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அவரின் இந்த துணிச்சலான செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version