செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் படுகாயம்!

Published

on

அமெரிக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு அருகில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்தியோர் தலைமறைவாகிவிட்டனர் எனவும் பொலிஸார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமம் உள்ளதால் அங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

எனினும் இந்தத் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்னவென இதுவரை தெரியவில்லை எனவும் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version