செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு!

Published

on

காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு!

வவுனியாவில் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் வவுனியாவில் நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா மதியாமடு, புளியங்கும் பகுதியைச் சேர்ந்த (வயது–73) செபமாலை இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நாட்டில் 2009 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் இராசதுரை விஜி கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

27 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த 12 ஆண்டுகளாக தேடி மகன் பற்றிய நம்பகர தகவல் ஏதும் அறியாமலேயே இந்த தந்தை உயிர்நீத்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்திலும் குறித்த தந்தை கலந்துகொண்டு தொடர்ச்சியாக போராடியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version