செய்திகள்

அமெரிக்காவில் 19 கொரில்லாக்களுக்கு தொற்று!

Published

on

அமெரிக்கா அட்லாண்டாவிலுள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிப்பட்ட கொரோனாத் தொற்று தற்போது உலக நாடுகளை கிலிகொள்ளச் செய்துள்ளது.

இந்த தொற்று பரவல் மனிதர்களுக்கு மட்டுமல்லாது சிங்கம், குரங்கு என விலங்குகளுக்கும் கொரோனாத் தொற்று பரவி வருகின்றது.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கொரில்லாக்களுக்கு இருமல் மற்றும் ஜலதோசம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன என கூறப்படுகிறது.

இதுவரை 13 கொரில்லாக்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 19 கொரில்லாக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version