செய்திகள்

மறுக்கப்பட்டு வரும் பெண்கள் உரிமைகள்!!

Published

on

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கையகப்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களின் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருவதோடு பெண்களுக்கு பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை

விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்க பல்வேறு கட்டுப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன , பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக போராட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இந்நிலையில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி ., பெண்கள் மந்திரிகளாக முடியாது. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். பெண்கள் மந்திரி ஆவது அவர்கள் கழுத்தில் சுமக்க முடியாத ஒன்றை வைப்பது போன்றதாகும் – என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் .

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version