செய்திகள்

இத்தாலிக்கு பறந்தார் பிரதமர்!

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றுவதற்காக பிரதமர் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டும் பிரதமரின் இத்தாலிப் பயணம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை மூடிமறைப்பதற்காக இத்தாலி பயணம் அமைந்துள்ளது என்று அண்மையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட் டை முன்வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் பாப்பரசரை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version