செய்திகள்

பிட்டுப் பானைக்குள் கசிப்பு உற்பத்தி – பெண் கைது!!

Published

on

வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பிட்டுப் பானைக்குள் கசிப்பு உற்பத்தி செய்துவந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
.
சந்தேக நபரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு மற்றும் 5 லீற்றர் கோடா ஆகியவை கைப்பற்றப்படுள்ளன.
அத்துடன் சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version