செய்திகள்

கிழக்கை மிரட்டும் டெல்டா – கல்முனையில் 95 வீதம் தொற்று!!

Published

on

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகளில் 95 வீதம் டெல்டா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டன.

அங்கு பரிசோதனை செய்யப்பட்ட  18 மாதிரிகளில் 17 கொரோனா டெல்டா வைரஸ் தொற்றும் ஒரு கொரோனா அல்பா வைரஸ் தொற்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியதும் மிகவும் அச்சறுத்தலானதுமாகும்.

எனவே மக்கள் நிலைமையைக்  கருத்தில்கொண்டு மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும், தடுப்பூசிகளை தவறாது பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version