செய்திகள்

இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குக! – அமெரிக்கா எச்சரிக்கை

Published

on

இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குக! – அமெரிக்கா எச்சரிக்கை

கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, புருனே, மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மேற்குறிப்பிடட மூன்று நாடுகளிலும் கொரோனாத் தொற்று பரவல் நிலை  4 ஆம் நிலையில் இருப்பதால் அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது .

மேலும் நெதர்லாந்து, மால்டா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கினி-பிசாவு குடியரசு ஆகிய நாடுகள் மூன்றாம் நிலையில் இருக்கின்றன எனவும் அறிவுறுத்தியுள்ளது

எனவே தடுப்பூசியை செலுத்த்தாத அமெரிக்க பிரஜைகள் குறித்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version