செய்திகள்

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

Published

on

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோருடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்கச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் காரைநகரில் நூற்றுக்கும் மேற்மேற்பட்டவர்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியதோடு அவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள சென்ற சிலர், பி,சி.ஆர். உபகரணங்களை வீசி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version