செய்திகள்

மன்னாரில் 21 பேருக்கு தொற்று – வயோதிபர் பலி!

Published

on

மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் புதிதாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மன்னார் முருங்கன் செட்டியார் கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த 67 வயது வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version