செய்திகள்
கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணிக்கு 3 குழந்தைகள்!!
6 வாரங்களுக்கு முன்பு கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சக்கிலா மடுவந்தி ராஜபக்ச எனும் புத்தளம் கிவுலாவைச் சேர்ந்த தாய் ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மூன்று குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login