செய்திகள்

அமைச்சர் டலஸ் தனிமைப்படுத்தலில்!!

Published

on

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோர் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு நேற்றுக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் அவர் கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தின்போது, பந்துல குணவர்த்தனவுடன், அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் முகக்கவசம் இன்றி தேநீர் அருந்தியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version