செய்திகள்

Corona தொற்றால் 132,003 பேர் பலி!

Published

on

கொரோனாத்(Corona) தொற்றால் பிரித்தானியாவில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் கொரோனாத் தொற்றால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 65 லட்சத்து 90ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா பெருந்தொற்றால், 35 ஆயிரத்து 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6 ஆவது நாடாக பிரித்தானியா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version